ஈழமக்களின் விடுதலைப் போராட்டத் திற்கு ஆதரவையும் ஆலோசனைக ளையும் வழங்கியவர் தோழர் சங்கரய்யா என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ன ணியின் (EPRLF) தலைவர் சுரேஸ் பிரேம சந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது :
“இந்தியாவின் பெருமைமிகு அரசியல் தலைவர்களில் ஒருவரும் நூற்றாண்டு கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநி லக்குழுவின் 15-ஆவது மாநிலச் செயலாள ரும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆகிய தோழர் என்.சங்க ரய்யா காலமானார் எனும் செய்தி அரசியல் உலகிற்கே துயரம் தரும் செய்தியாகும்.
மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் அடக்குமுறை களுக்கு முகம் கொடுத்து தடியடிகளைத் தாங்கி யும், தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண் டும், பல்வேறு போராட்டங்களில் இடைவிடாது பங்கேற்ற களப்போராளி தோழர் சங்கரய்யா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது இருந்த 36 தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் சங்கரய்யா. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று இந்தியா சுதந்தி ரக் காற்றைச் சுவாசித்தபோதுதான் சங்கரய்யா வும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். உழைப்பாளர்களின் உற்ற தோழனாக நின்று பல போராட்டங்களை முன்னெடுத்த தோழர் சங்கரய்யா, பொதுவாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் தனது இறுதி மூச்சுவரை கம்யூனிசக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புடன் இருந்தார்.
இலங்கையில் நடைபெற்ற ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தின் அவசியங்களைப் புரிந்து கொண்டு தமது கட்சியின் அரசியல் கொள்கைகளுக்கு முரண் இல்லாமல் எமது கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு (EPRLF) ஆதரவையும் ஆலோ சனைகளையும் வழங்கியதை நன்றியோடு நினைக்கின்றோம்.
அவரது மறைவு அகில உலகக் கம்யூ னிஸ்ட் பேரியக்கத்தின் இழப்பு எனவே கருது கிறோம். ‘மக்களுக்காக வாழ்ந்த மகத்தான போராளிகளின் மரணம்.... வாழ்வின் முடிவல்ல’ எனும் எமது தலைவர் தோழர் பத்ம நாபாவின் வரிகளை நெஞ்சில் சுமந்து வீர வணக்கம் செய்கின்றோம்.
இவ்வாறு சுரேஸ் பிரேமசந்திரன் குறிப் பிட்டுள்ளார்.